இந்திய தாக்குதலில் 6 பாக் வீரர்கள் பலி
ஜம்மூ:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானின் பதுங்குக் குழிகள் மீது இந்தியா நடத்திய பீரங்கித் தாக்குதலில் 6பாகிஸ்தானிய வீரர்கள் இறந்தனர். 10 பதுங்குக் குழிகள் அழிக்கப்பட்டன.
எல்லைப் பகுதியில் இருந்த ஹர்கத்-உல்-முஜாகிதீனின் வயர்லெஸ் தொலைத் தொடர்பு கோபுரமும்தரைமட்டமாக்கப்பட்டது.
பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் இரு தரப்பினரும் மிக பயங்கர தாக்குதலில்ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலில் எல்லையில் மேய்ந்து கொண்டிருந்த பல மாடுகள் பலியாகியுள்ளன.பாகிஸ்தான் படையினர் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இதனால் இதுவரை எல்லைப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த 1.4 லட்சம் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவருகின்றனர். இவர்களில் பல குடும்பத்தினர் இந்திய ராணுவ முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காரி-கர்மரா பகுதியில் இன்று அதிகாலையில் பல பாகிஸ்தானிய பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
இந் நிலையில் மேலும் ஒரு ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மஞ்ச்கோட்என்ற இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தினர். இதில்ஒரு இந்திய வீரர் இறந்தார்.
அதே போல தோடா மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்து மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த சிறப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு வீரர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.
தோடா மாவட்டத்தின் லக்கந்தர் என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப் படையினரும் இந்தோ-திபெத் எல்லைப்போலீசாரும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தியபோது தப்பியோடிய ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிசெளகத் ஹீசைன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கம்யூனிஸ்ட்களுடன் வாஜ்பாய் பேச்சு:
இதற்கிடையே இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் வாஜ்பாய் இன்று ஆலோசனைநடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் அவர் நேற்று எல்லை நிலவரம் குறித்துப் பேசினார். இன்றுகம்யூனிஸ்ட்களுடன் ஆலோசித்தார்.
சோனியா மற்றும் இடதுசாரிக் கட்சியினருடன் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வது குறித்தும் வாஜ்பாய்ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.