ரஜினி மன்ற போர்டு மீது ஜெ. போஸ்டர்: வாணியம்பாடியில் பதற்றம்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் ரஜின ரசிகர் மன்ற போர்டு மீது ஜெவின் படம் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி ரஜினி ரசிகர்கள்ஆத்திரம் அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், அதிமுகவுக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது என்று சமீபத்தில்அறிவித்தார். இதனால் அதிமுகவுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன்தினம் வாணியம்பாடி கலந்தராவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற போர்டு மீது அதிமுகவினர் ஜெயலலிதாவின் படம்உள்ள போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவினர் தங்களை சீண்டிப்பார்ப்பதாக கூறும் ரஜினி ரசிகர்கள், அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் செய்தியைப் பரப்பி அவர்களைஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே ரஜின் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் சில அதிமுக பிரமுகர்கள் இறங்கியுள்ளனர். அதிமுக போஸ்டரைஅப்புறப்படுத்திய அவர்கள். அம்மாவும் ரஜினியும் தான் இப்போ ராசி ஆயிட்டாங்களே... அப்புறம் நமக்குள்ள என்னப்பா சண்டை என்றரீதியில் பேசி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மூடில் ரஜினி ரசிகர்கள் இல்லை. இதனால், சத்யநாராயணவைக் கொண்டுஇவர்களை அடக்க அதிமுக மேலிடம் முயலும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications