தமிழகத்தை ஓ.. போடு படுத்தும் பாடு
குற்றாலம் :
குற்றாலத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு ஓ... போடு பாடலை பாடி, ஆடிக் கொண்டிருந்தார்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரை கைது செய்தனர்.
நெல்லையை அடுத்துள்ள தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (31). இவர் குற்றாலம் சீசனைஅனுபவிக்க குற்றாலம் வந்தவர். அருவியில் குளிததுவிட்டு வந்த அவருக்கு உற்சாகம் பற்றிக் கொண்டது.
அதை ஓ..போடு பாடலைப் பாடி வெளிப்படுத்தினார் செல்வகுமார். பாடுவதோடு நிறுத்தாமல் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நடுரோட்டில் வந்து நின்று அந்தப் பாடலுக்கு டான்சும் ஆடினார்.
இந்த இலவச கலை நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். இதனால் போக்குவரத்து முழுவதுமாகபாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் செல்வக்குமாரை கூப்பிட்டு எச்சரித்தனர். கூட்டத்தையும்கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர்.
ஆனால், ஜெமினி டான்ஸ் வெறியில் இருந்த செல்வகுமாரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.தொடர்ந்து ஓ.. போட்டார். ஆடினார். இதனால் கூட்டம் கலைந்து போக மறுத்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாக செல்வகுமார் மீது வழக்குப் போட்டு அவரைக் கைது செய்து இழுத்துச்சென்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications