எல்லையில் 7 லட்சம் இந்திய ராணுவத்தினர் குவிப்பு
ஜம்மூ:
காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைக்கு அப்பாலிலிருந்து பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் 19 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஆரம்பித்து தற்போது மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் பயங்கரமான தாக்குதலை அவர்கள்நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மோர்ட்டார் ரக குண்டு வீச்சில் இதுவரை 23 கிராமங்களில் உள்ளநூற்றுக்கணக்கான வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்த 43,796 பேர் பாதுகாப்பானஇடத்திற்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மூ-பூஞ்ச் பகுதியில் இந்தியப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலைமேலும் தீவிரப்படுத்துவதற்காக அப்பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில் தற்போது இந்தஅளவிற்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான புதிய பதுங்கு குழிகளும் பாகிஸ்தான் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் மணல் தடுப்புகளும் வெகுவேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. எல்லை நெடுகிலும் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களும்அமைக்கப்பட்டு வருகின்றன.
எல்லையில் 24 மணி நேரமும் இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போருக்கான உத்தரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நடக்கவிருக்கும் அந்தப் போரில்வெற்றியும் பெறுவோம் என்று ஒரு ராணுவ வீரர் நிருபர்களிடம் கூறினார்.
இந்தியாவை நோக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் படையினர் மக்கள் வாழும் பகுதிகளைநோக்கித் தான் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். ஆனால் நாங்கள் நடத்தும் பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான்பொதுமக்கள் யாரும் பாதிப்படைவதில்லை என்று வேறு சில வீரர்கள் தெரிவித்தனர்.
ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மூன்றுலஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் படையினர் நடத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான ஷெல் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டுஇந்தத் தீவிரவாதிகள் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தோபி-சாப்ஸியான் பகுதியில் ஊடுருவ முயன்றனர்.
எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் வரும் போது அந்தத் தீவிரவாதிகளும் கண்மூடித் தனமாகத்துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே வந்தனர்.
ஆனால் இந்திய ராணுவத்தினர் பதிலடித் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications