மதுரை அருகே வேன் மீது லாரி, பஸ் மோதல் .. 4 பேர் பலி
சென்னை:
சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் மீது கண்டெய்னர் லாரியும், தனியார்ஆம்னி பஸ்சும் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து வேன் ஒன்றில் சிலர் குற்றாலம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். மதுரை மாவட்டம்மேலூர் அருகே இந்த வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது மணப்பாறையிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.
மேலூர் அருகே சத்யபுரம் என்ற இடத்தில் வேன் மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. அதே சமயத்தில்வேனுக்குப் பின்புறம் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் ஆம்னி பஸ்சும் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில்வேன் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் படுகாயமடைந்தஅனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் அமிர்தவள்ளி, கிரண், சுப்ரமணியன் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். மற்றவர்களுக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.