அச்சிறுப்பாக்கத்தில் கருணாநிதி, ராமதாஸ் இன்று கூட்டுப் பிரச்சாரம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி அச்சிறுப்பாக்கம் தொகுதியில் இன்று (சனிக்கிழமை) சூறாவளி பிரச்சாரம்மேற்கொள்கிறார். அவருடன் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கலந்து காள்ளும் பொதுக்கூட்டம் இன்று மாலைநடக்கிறது.
கருணாநிதி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் வாணியம்பாடியில்திமுக வேட்பாளரான நாகூர் ஹனீபாவுக்காக ஓட்டுக் கேட்டு கடந்த 20 மற்றும் 21ம் தேதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அதன் பிறகு தற்போது அவர் அச்சிறுப்பாக்கத்தில் அத்தொகுதி பா.ம.க. வேட்பாளரான பார்வேந்தனை ஆதரித்துஇன்று பிரசாரம் செய்யவுள்ளார்.
இன்று கடப்பாக்கத்தில் தனது பிரசாரத்தத்ை துவக்கும் கருணாநிதி பல்வேறு கிராமங்களுக்கும் சென்று ஓட்டுகேட்கிறார். பின்னர் இன்றிரவு 7.30 மணிக்கு அச்சிறுப்பாக்கத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநதிபேசுகிறார்.
அவருடன் ராமதாசும் கலந்து கொண்டு தன்னுடைய வேட்பாளரை ஆதரித்து அந்தப் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.
அச்சிறுப்பாக்கம் பிரசாரம் முடிந்த பிறகு வரும் 27ம் தேதி முதல் பிரச்சாரத்தின் கடைசி நாளான 29ம் தேதி வரைசைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா. சுப்ரமணியத்துக்காக கருணாநிதி ஓட்டுக் கேட்டு பிரச்சாரம்செய்யவுள்ளார்.