நாகர்கோவில் அருகே மீனவர்களிடையே பயங்கர கோஷ்டி மோதல்
Subscribe to Oneindia Tamil
மண்டைக்காடு:
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே நடந்த கோஷ்டி மோதலில் 15 மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
மண்டைக்காடு அருகே உள்ளது புதூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பு மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக முன்பகை இருந்து வந்தது.
நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இது மீண்டும் வெடித்தது. கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர்குடும்பங்களை எதிர் தரப்பினர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் 15 பேர் வரை படுகாயம் அடைந்தனர். தாக்கப்பட்டவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த அனைவரும் கோட்டார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications