இடைத் தேர்தல்: வன்முறையை கட்டவிழ்க்க அதிமுக திட்டம் - இளங்கோவன் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடஅதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆட்சியில் இருப்பதால் அதிமுகவினரும் தொடர்ந்து அராஜகப் போக்கையே கையாண்டு வருகின்றனர்.
தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு எந்திரங்களைத்தவறான முறையில் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் அதிமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடத் திட்டமிட்டுள்ளனர் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications