அமைதிப் பகுதியில் பாக். திடீர் தாக்குதல்: 5 பேர் பலி
ஜம்மூ:
எல்லையில் இதுவரை துப்பாக்கச் சூடு சம்பவங்கள் நடந்திராத புதிய இடத்தில் பாகிஸ்தான் படைகள் நேற்றுதிடீரென பீரங்கித் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர்.
ஜம்மூவில் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள சர்வசே எல்லையில் ஆர்.எஸ்.புரா மற்றும் ஜநகர் ஆகிய இடங்களில்பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென பீரங்கிகளால் சுட்டனர்.
இந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருமே இதுவரை பீரங்கித் தாக்குதலிலோ துப்பாக்கிச் சண்டையிலோஈடுபட்டதில்லை. மிக அமைதியான இடம் என்பதால் இங்கு வாழும் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்கு ஓடவில்லை.
ஆனால், இந்தம மக்களின் நம்பிக்கையில் பாகிஸ்தான் குண்டு போட்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் இறந்தனர். இதையடுத்து இந்தியப் படைகளும் உடனடியாக பதில் பீரங்கித்தாக்குதலில் ஈடுபட்டனர். மிகக் கடுமையாக இந்தியப் படைகள் தாக்கின. மூன்று பாகிஸ்தானின் ராணுவகூடாரங்கள் தகர்க்கப்பட்டன.
இத் தாக்குதலையடுத்து இந்தப் பகுதியில் 9 கிராமங்களில் வசித்து வந்த 10,000 பேரை ராணுவம் பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச் சென்றது.












Click it and Unblock the Notifications