எலியால் ஒலித்த வங்கியின் அபாய மணி
சென்னை:
சென்னை திருவொற்றியூல் உள்ள அரசு வங்கியின் அபாய மணி திடீரென அலறியது.
இதையடுத்து கொள்ளையர்கள் நுழைந்துவிட்டதாகக் கருதிய போலீசார் ஆயுதங்களுடன் அதை சுற்றி வளைத்தனர். ஆனால், திருடனைஎதிர்பார்த்து உள்ளே நுழைந்த போலீஸாருக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அபாய மணியின் வயரை எலி கடித்ததால்தான் இந்தசப்தம் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மக்கள் நெரிசல் மிக்க இடத்தில் அந்த வங்கி உள்ளது. இரவில் வங்கியின் அபாய மணி திடீரென்றுஅலறியது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். வங்கிமேலாளருக்கும் தகவல் தரப்பட்டது. சாவியுடன் அவரும் வந்து சேர்ந்தார்.
பின்னர் போலீஸார் வங்கியைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ஆனால் உள்ளே கொள்ளையர்கள் யாரையும் காணவில்லை. பின்னர் அபாயமணி பொருத்தப்பட்ட இடத்தைப் பார்த்தபோது அதன் வயரை எலி கடித்திருந்தது தெய வந்தது. இதன் காரணமாகவே மணி அலறியுள்ளது.
இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications