For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாம் முடிந்த பின் வந்த போலீஸ் !!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பணியில் இருந்தபோது இறந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் கலந்து கொள்ள வேண்டியஆயுதப் படை போலீஸார், காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் காலதாமதமாக வந்து சேர்ந்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் அனிதா. இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவுகாரணமாக மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதைகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துஇறுதிச் சடங்கின்போது துப்பாக்கிகளால் வானை நோக்கி சுடுவதற்காக ஆயுதப் படை போலீஸார் வருவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நடைபெறுவதாக ஆயுதப் படைபோலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிச் சடங்கிற்காக அனைவரும் வந்து விட்டனர். இறுதி மரியாதை செலுத்த வேண்டிய ஆயுதப்படை போலீஸாருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்காக உடலுடன் பல மணி நேரம் அனிதாவின் வீட்டினர் கல்லறையில் காத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் வரவில்லை. இதையடுத்து அரசு மரியாதை ஏதும் இல்லாமலேயே இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது. பின்னர் அனைவரும்கலைந்து சென்றனர்.

சிறிது நேரம் கழித்து ஆயுதப் படை போலீஸார் சாவகாசமாக துப்பாக்கிகளைத் தூக்கியபடி வந்தனர். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்தியகல்லறைத் தோட்ட வாட்ச்மேன், எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குப் போய் விட்டனர் என்று கூறி திருப்பி அனுப்பினார்.

ஆயுதப் படை போலீசாரின் செயல் நகர காவல்துறையினர் இடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X