கண்ணாடியை "நறநற"வென்று கடித்து சாப்பிடும் சமையல்காரர்
குமாரபாளையம்:
குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒரு சமையல்காரர் கண்ணாடியை முறுக்கு, கற்கண்டு போல் கடித்துச் சாப்பிடும்அதிசயத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கிழக்கு காந்திபுரத்தைச் சேர்ந்தவர் அர்த்தனாரி சாமி (45). இவர்தன் தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஒரு சமையல் தொழிலாளி.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்வதற்காகக் கண்ணாடித் துகள்களை மென்று விழுங்கிய அர்த்தனாரிமறுநாளே உயிர் பிழைத்துக் கொண்டார். இதற்குப் பிறகே கண்ணாடி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று கூறிக்கொண்டு அடிக்கடி அதை "நறநற"வென்று நொறுக்கிச் சாப்பிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து அர்த்தனாரி கூறியதாவது:
சமையல் செய்வது எங்களுடைய குடும்பத்தின் பரம்பரைத் தொழில். எனக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டுசகோதரிகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.நான் என் தாயாருடன் வசித்து வருகிறேன்.
எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளும் தெரியும். எனக்கு எட்டுவயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி வடமாநிலங்களில் கூலி வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கினேன்.
இன்று வரை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த வகையில் ஒருமுறை கோவாவுக்கு சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டேன். அப்போது வாழ்க்கை மீது வெறுப்பு வந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
இதையடுத்து பாட்டிலை நொறுக்கி கண்ணாடித்துகள்களை மென்று விழுங்கினேன். அது குடலில் சென்று கிழித்தால்வலி வருமே என்று பயந்து சாராயத்தையும் குடித்தேன். பிறகு தலை "கிர்"ரென்று சுற்றியது. நமது வாழ்க்கைஅவ்வளவு தான் என்று எண்ணி அப்படியே படுத்துவிட்டேன்.
ஆனால் மறுநாள் விடியற்காலையில் எப்போதும் போல் கண்விழித்தேன். அப்போது தான் தெரிந்தது நான்அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டது. மேலும் கண்ணாடி தின்றதால் உடலிலோ வயிற்றிலோ எந்தவிதமானபாதிப்பும் எனக்கு ஏற்படததால் அதையே ஒரு சாதனையாக செய்ய நினைத்தேன்.
கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு கண்ணாடி பாட்டிலை உடைத்து தின்று காட்டுகிறேன் என்று தன்னுடையசாதனை வரலாறைக் கூறினார் அர்த்தனாரி.
கண்ணாடித்துகள்களை நொறுக்கி அவர் தின்னும் போது, வாயில் கண்ணாடி கீறி விடாதபடி கவனமாக கடித்துதின்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிடும் இவருக்கு உடல்ரீதியாக எந்த கோளாறும் ஏற்படாததும் காண்போரைஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications