Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணாடியை "நறநற"வென்று கடித்து சாப்பிடும் சமையல்காரர்

Subscribe to Oneindia Tamil

குமாரபாளையம்:

குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒரு சமையல்காரர் கண்ணாடியை முறுக்கு, கற்கண்டு போல் கடித்துச் சாப்பிடும்அதிசயத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கிழக்கு காந்திபுரத்தைச் சேர்ந்தவர் அர்த்தனாரி சாமி (45). இவர்தன் தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஒரு சமையல் தொழிலாளி.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்வதற்காகக் கண்ணாடித் துகள்களை மென்று விழுங்கிய அர்த்தனாரிமறுநாளே உயிர் பிழைத்துக் கொண்டார். இதற்குப் பிறகே கண்ணாடி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று கூறிக்கொண்டு அடிக்கடி அதை "நறநற"வென்று நொறுக்கிச் சாப்பிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அர்த்தனாரி கூறியதாவது:

சமையல் செய்வது எங்களுடைய குடும்பத்தின் பரம்பரைத் தொழில். எனக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டுசகோதரிகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.நான் என் தாயாருடன் வசித்து வருகிறேன்.

எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளும் தெரியும். எனக்கு எட்டுவயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி வடமாநிலங்களில் கூலி வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கினேன்.

இன்று வரை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த வகையில் ஒருமுறை கோவாவுக்கு சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டேன். அப்போது வாழ்க்கை மீது வெறுப்பு வந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இதையடுத்து பாட்டிலை நொறுக்கி கண்ணாடித்துகள்களை மென்று விழுங்கினேன். அது குடலில் சென்று கிழித்தால்வலி வருமே என்று பயந்து சாராயத்தையும் குடித்தேன். பிறகு தலை "கிர்"ரென்று சுற்றியது. நமது வாழ்க்கைஅவ்வளவு தான் என்று எண்ணி அப்படியே படுத்துவிட்டேன்.

ஆனால் மறுநாள் விடியற்காலையில் எப்போதும் போல் கண்விழித்தேன். அப்போது தான் தெரிந்தது நான்அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டது. மேலும் கண்ணாடி தின்றதால் உடலிலோ வயிற்றிலோ எந்தவிதமானபாதிப்பும் எனக்கு ஏற்படததால் அதையே ஒரு சாதனையாக செய்ய நினைத்தேன்.

கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு கண்ணாடி பாட்டிலை உடைத்து தின்று காட்டுகிறேன் என்று தன்னுடையசாதனை வரலாறைக் கூறினார் அர்த்தனாரி.

கண்ணாடித்துகள்களை நொறுக்கி அவர் தின்னும் போது, வாயில் கண்ணாடி கீறி விடாதபடி கவனமாக கடித்துதின்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிடும் இவருக்கு உடல்ரீதியாக எந்த கோளாறும் ஏற்படாததும் காண்போரைஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+