கோடை மழைக்கு 5 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழைக்கு 3 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையில் புதன்கிழமை பிற்பகல் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழைபெய்தது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நல்ல மழை பெய்தது.
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் இன்னும் தேங்கிக் கிடக்கிறது.
மணலி பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த பெருமாள் நாயக்கர் என்பவரது வீட்டில் திடீரென மின்சாரம் தடைபட்டது.வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அதை வேடிக்கை பார்ப்பதற்காக நாயக்கரின் குடும்பத்தினர் வெளியேவந்து நின்றனர். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் நின்றிருந்தனர்.
அப்போது வீட்டின் ஜன்னல் சாளரம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பரணிகுமார், பிரவீன் குமார் ஆகிய இருசிறுவர்களும் சிக்கி பலியாயினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கன மழைபெய்தது. தாம்பரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு பல இடங்களில் மின்கம்பங்கள்சாய்ந்து விழுந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 55 வயது மூதாட்டியும், 52 வயது முதியவரும் பலியாயினர்.அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பலியானான். அவன் ஆடு மேய்க்கும் சிறுவன். அவன்மேய்த்துக் கொண்டிருந்த 22 ஆடுகளும் பரிதாபமாக மின்னல் தாக்கி இறந்தன.












Click it and Unblock the Notifications