Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி மீது அதிமுகவினர் கொலைவெறித் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி ரேசன் கார்டுகள், போலி சாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களித்தவர்களைத் தட்டிக் கேட்ட திமுகமுன்னாள் அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.

அதே போல தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி திமுக துணை மேயர் விஸ்வநாத பாண்டியனைஅதிமுகவினர் அரிவாளால் வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் ஏராளமான போலி வாக்காளர்களை தயார்செய்திருப்பதாகவும் அவர்களுக்கு தாசில்தார் அலுலகத்தில் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுவழங்கப்பட்டுள்ளதாகவும் திமுக புகார் கூறியுள்ளது.

இந் நிலையில் கோட்டூர்புரத்தில் இது போன்ற போலி ரேசன் கார்டைக் காட்டி வாக்களிக்க வந்தவர்களைபொன்முடி தடுத்து நிறுத்தியபோது அவரை அதிமுகவினர் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:

கோட்டூர்புரம் டி.டி.ஐ. பள்ளி வாக்குச் சாவடியில் போலி ரேசன் கார்டைக் காட்டி ஓட்டு போடப்படுவதாக அறிந்தநான் அங்கு சென்றேன். என்னுடன் திமுக தொண்டர்களும் வந்தனர். எங்களை போலீசார் தடுத்தனர். போலி ரேசன்கார்டுகள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறினேன். இதையடுத்து வாக்குவாதம் செய்த போலீசார்என்னை மட்டும் வாக்குச் சாவடிக்குள் செல்ல அனுமதித்தனர்.

எங்கள் தொண்டர்களை வெளியிலேயே தடுத்துவிட்டனர். உள்ளே தனியாகப் போன நான் போலி ரேசன்கார்டுகளைக் காட்டி வாக்களிக்க வந்தவர்களிடம் கேளவி கேட்டுக் கொண்டிருந்தேன். தங்களுக்கு அதிமுகவினர்தான் இந்த கார்டுகளைத் தந்து வாக்களிக்க அனுப்பியதாக அவர்கள் கூறினர்.

அப்போது சுமார் 20 அதிமுகவினர் என்னை சுற்றி வளைத்தனர். திமுக தொண்டர்களை மட்டும் வெளியில் தடுத்தபோலீசார் இவர்களை எப்படி உள்ளே விட்டார்கள் என்று தெரியவில்லை.

அவர்கள் என்னிடம் வந்து ஒருமையில் நீ என்ன பெரிய இவனா, நீ தான் தேர்தல் அதிகாரியா என்று ஏகத்துக்கும்பேசினர். அவர்களிடம் நான் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோதே நான் கைப்பற்றியிருந்த போலி ரேசன்கார்டுகளைப் பறித்தனர்.

அப்போது 3 கார்கள் அங்கு வந்தன. குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா (இவர் அதிமுகவின் முக்கியஅடிதடி ஆட்களில் ஒருவர்) தலைமையில் 10 பேர் அங்கு வந்தனர். பாலகங்கா என்னை முகத்தில் குத்தினார். நீஎன்ன பெரிய ஆபிசரா என்று கேட்டுக் கொண்டு தாக்கினார். அவருடன் வந்த அதிமுகவினரும் தாக்கினர்.

இதில் என் உதடு கிழிந்தது. வாய், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த திமுகவினரை போலீசார்தடுத்துவிட்டனர். ஆனால், அதிமுகவினர் என்னைத் தாக்க போலீசார் அனுமதித்தனர்.

இதை போலீசார் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இதன் பின்னர் திமுகவினர் தான் என்னைக் காப்பாற்றிஅழைத்து வந்தனர் என்றார்.

பொன்முடியின் உதடு கிழிந்துள்ளது. முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது கை, கால்களில் காயங்கள் உள்ளன.அவற்றை அவர் நிருபர்களிடம் காட்டினார்.

அதிமுகவினர் பல இடங்களில் கள்ள ஓட்டு போட்டதாக பரவலாக புகார் கூறப்பட்டுள்ளது.

திமுகவுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் சைதாப்பேட்டையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+