For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயாவை விமர்சித்த தாமரைக்கனி மீது வழக்கு
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுன் பகுதியில் கடந்த மாதம் திமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய தாமரைக்கனிஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தும் அவதூறாகவும் பேசியதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய போலீசார்தகவல் தெரிவித்தனர்.
தாமரைக்கனியின் பேச்சை ஆய்வு செய்த உயர் போலீஸ் அதிகாரிகள் அவர் மீது அவதூறு வழக்குத் தொடரஉத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து திருநெல்வேலி டவுன் போலீசார் தாமரைக்கனி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Comments
Story first published: Friday, May 31, 2002, 5:30 [IST]