இந்திய ராணுவம் தாக்கி 13 பாகிஸ்தானிய வீரர்கள் பலி
ஜம்மூ:
ஜம்மூ-காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானிய வீரர்கள் 13 பேரை இந்திய ராணுவம்கொன்றது.
ஜம்மூ-லே தேசிய நெடுஞ்சாலையை குறி வைத்து பாகிஸ்தான் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதையத்துஇந்தியப் படைகள் பயங்கர பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 4 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். 10பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன. மேலும் பல பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.
அதே போல ரன்பீர்சிங்புரா என்ற இடத்தில் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தபட்டதையடுத்து பதில்தாக்குதலில் இந்தியா இறங்கியது. கனரக பீரங்கிகளால் இந்தியா தாக்கியது. இந்தக் குண்டுகள் சரியாகபாகிஸ்தானின் பதுங்கு குழிகளில் விழுந்து வெடித்தன. இதில் 8 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதே போல சியாச்சின் பகுதியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் பயங்கர சண்டையில் ஈடுபட்டுள்ளன.
வாஜ்பாய் கஜாகிஸ்தான் பயணம்:
இந் நிலையில் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் நாளை கஜாகிஸ்தான் செல்கிறார்.அவர் ரஷ்ய அதிபர் புடின் உள்பட பல தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரும் கஜாகிஸ்தான் செல்கிறார். ஆனால், அவரை வாஜ்பாய் சந்திக்க மாட்டார்.அங்கு சீன அதிபர் ஜியாங் ஜெமினை சந்திப்பதற்காக தனது பயணத்தை ஒரு நாள் நீட்டித்துள்ளார் வாஜ்பாய்.
பாகிஸ்தானின் வான் பரப்பில் பறக்கக் கூடாது என்பதற்காக ஈரான் வழியாக சுற்றிக் கொண்டு வாஜ்பாய்கஜாகிஸ்தான் செல்கிறார். இதனால் கூடுதலாக அவர் ஏழரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications