For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருடனுடன் சேர்ந்து திருட்டு நகைகளை விற்ற போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

கோவில்பட்டி:

திருடனுடன் சேர்ந்து கொண்டு திருட்டு நகைகளை நகைக் கடையில் விற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உத்திரவாசகம். இவர்வட்டிக்குப் பணம் விடுவதையும் "சைட் பிசினஸாக" செய்து வருகிறார். நகைகளைக் கொடுத்து இவரிடம் பணம்வாங்கிச் செல்லலாம்.

சஹாய மணி என்பவர் சமீபத்தில் கேரளாவில் 250 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு கோவில்பட்டி வந்துசேர்ந்தார். அங்கு நகைகளை விற்க முயன்றபோது ஒரு நகைக் கடையிலும் அதை வாங்கிக் கொள்ளவில்லை.திருட்டு நகைகளாக அவை இருக்கலாம் என்று கருதியதால் அவர்கள் வாங்க மறுத்தனர்.

இதனால் என்ன செய்வது என்று விழித்த சஹாய மணி, நகைகளை எடுத்துக் கொண்டு உத்திரவாசகத்திடம் வந்துநகைகளை விற்கத் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சஹாய மணியுடன் தெற்கு பஜார் வீதியில் உள்ள கணேசன்என்பவரது நகைக் கடைக்கு வந்தார் உத்திரவாசகம். கணேசனை சமாதானப்படுத்தி நகைகளை வாங்கிக்கொள்ளுமாறு செய்தார்.

நகைகளை வாங்கிக் கொண்ட கணேசன் அதற்குப் பதிலாக அவர்களிடம் ரூ.1.12 லட்சம் பணம் கொடுத்தார்.

சில நாட்களில் கேரள போலீசார் சஹாய மணியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு கோவில்பட்டி வந்தனர்.அவரைக் கைது செய்து கேரளா கொண்டு சென்று விசாரித்த போது தான் உத்திரவாசகம் திருட்டு நகைகளை விற்கஉதவியது குறித்துத் தெரிய வந்தது.

இதுதொடர்பாக கோவில்பட்டி டிஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் உத்திரவாசகத்தைசஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. சுமித் சரண் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X