தேவாரத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின் தலைவராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழகடி.ஜி.பி. வால்டர் தேவாரத்தின் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது பதவிக் காலத்தைமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிதுள்ளார்.

ஓராண்டு காலம் மட்டுமே வரையறுக்கப்பட்ட இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இவரதுபதவிக்காலத்தை மேலும் ஓராண்டு, அதாவது, அடுத்த ஆண்டு மே மாத இறுதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வீரப்பனின் ஆள்பலம் குறைந்து விட்டதாகவும், வீரப்பனின் கூட்டாளிகளாக ஒரு சிலரே வீரப்பனுடன் இருப்பதாகவும், இதனால்வீரப்பன் பிடிபட அதிக வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு கருதுவதால் தேவாரத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகதமிழக அரசு கூறியுள்ளது.

பதவியிலிருந்து விலகிவிட தேவாராம் ஆர்வம் காட்டினார். அவரது செயல்பாடுகள் குறித்து குறைகள் கூறப்பட்டதால் அவர் இந்தமுடிவுக்கு வந்திருந்தார். ஆனால், இதையும் மீறி அவருக்கு பதவி நீட்டிப்பு தநதுள்ளார் ஜெயலலிதா.

மேலும், இதே போல் தமிழக அரசின் வீண் செலவுகளை குறைப்பதை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிஏ.எம்.சுவாமிநாதனை கொண்டு கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலமும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தகமிஷனின் பதவிக்காலத்தையும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக் கமிஷன் கொடுக்க பரிந்துரையின்பேரில் தான் அரசு ஊழியர்களுக்கு பலவிதமான சலுகைகளை ரத்துசெய்து, அதிகாரிகளின்செலவுகளுக்கு பல கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+