எஸ்.எஸ்.எல்.சியில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு தமாகா பரிசு
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவிக்கும் 2வது மாணவனுக்கும் தமாகா சார்பில் அதன் தலைவர்ஜி.கே. வாசன் பரிசு வழங்கி பாராட்டினார்.
"அபுல் கலாம் ஆசாத் அறக்கட்டளை"யை தமிழ் மாநில காங்கிரசில் உள்ள சிறுபான்மைப் பிரிவினர் நடத்திவருகின்றனர். இந்த அறக்கட்டளையில் சார்பில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சியில் முதல் இரண்டு இடத்தைபெறும் மாணவ-மாணவிகளுக்கு தமாகா பரிசு வழங்கி பாராட்டுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற சேலம் மாணவிஹேமப்பிரியாவுக்கு ரூ.5,000ம், இரண்டாவது இடத்தைப் பெற்ற சென்னை மாணவன் சரவணனுக்கு ரூ.2,000ம்பரிசாக வழங்கி அவர்களை வாழ்த்தினார் வாசன்.
இந்த விழா சத்தியமூர்த்தி பவனில் இதயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியில் தமாகாதுணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, பாரமலை உள்பட பலரும் கலந்து கொணடனர்.












Click it and Unblock the Notifications