தலீத்களை கொடுமைப்படுத்திய பஞ்சாயத்துத் தலைவி கைது
திருச்சி:
மனிதாபிமானம் அற்ற முறையில் தலீத் மக்களை சூடு போட்டும், அடித்தும் கொடுமைப்படுத்திய பஞ்சாயத்து தலைவியும் அவரதுகணவரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி திண்ணியம் கிராமத்து பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் ராஜலெட்சுமி. இவரது கணவர் சுப்பிரமணியன். இந்த இருவரும் ஒருபிரச்சனை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முருகேசன், கருப்பையா என்ற தலீத் இனத்தைச் சேர்ந்த இருவரை அடித்து, உதைத்து,சூடுபோட்டு, மிகவும் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் தலித் காலனியைச் சேர்ந்த மக்கள் அழுதவண்ணம் புகார் செய்தனர். இதையடுத்து இந்தபஞ்சாயத்துத் தலைவியையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்து தலித்களை கருணையின்றி அடித்து உதைத்த மேலும் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலைய விசாரணைக்குப் பின் இந்த 6 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இரு தலித்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.