For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் கட்டணம் உயராது... அமைச்சர் உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம்அரசுக்கு இல்லை என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

டீசல் விலை உயர்ந்தால் பஸ் கட்டணம் உயரும் என்று பல மாநில அரசுகளும் ஏற்கனவே அறிவித்திருந்தன.இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைபுதன்கிழமை துவக்கி வைத்து விஸ்வநாதன் கூறுகையில்,

டீசல் கட்டணம் உயர்ந்திருப்பதால் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெறும் வதந்தி தான். அப்படி ஒருஎண்ணமே அரசிடம் இல்லை. போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம்செலவீனங்களை அரசு சமாளிக்கும்.

சென்னையில் ஆன்லைன் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம்உள்ள 925 பள்ளிகளைச் சேர்ந்த 3.5 லட்சம் மாணவ-மாணவியருக்கு இந்த முறை மூலம் பாஸ்கள் வழங்கப்படும்.

இதற்காக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு மட்டும் மாணவ-மாணவியர் ரூ.15 கொடுக்க வேண்டும். இத்திட்டம்வெற்றியடைந்தால் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இலவச பஸ் பாஸ் வழங்குவதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்என்றார் விஸ்வநாதன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X