அனைத்து கட்சிகளும் மகிழ்ச்சி
சென்னை:
சைதாப்பேட்டையில் நடந்து வரும் மறு வாக்குப் பதிவு நியாயமான முறையில் நடந்து வருவதாக திமுக, அதிமுக,மதிமுக ஆகிய அனைத்துக் கட்சியினரும் கருத்துத் தெரிவித்துள்ளர்.
திமுக:
வாக்குச் சாவடிகளை சுற்றி வந்த திமுக தலைமை ஏஜெண்டும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறுகையில்,ஆங்காங்கே அதிமுகவினர் போலி அட்டைகளுடன் சுற்றிக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் இந்தத் தேர்தல்மிக அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்து வருகிறது. மத்திய போலீசார் இருப்பதால் தான் அதிமுகவினர்அடக்கி வாசிக்கின்றனர் என்றார்.
அதிமுக:
சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளரான ராதாரவியும் வாக்குச் சாவடிகளை சுற்றி வந்தார். அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதால் அவரை திருப்திப்படுத்த இந்தமறு தேர்தல் நடக்கிறது.
இப்போது மத்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார். இதிலும்ஏதாவது குறை தான் கூறுவார். எப்படியிருந்தாலும் அதிமுகவின் வெற்றி உறுதி என்றார்.
மதிமுக:
மதிமுக வேட்பாளரான பா.சுப்பிரமணி கூறுகையில், கடந்த 31ம் தேதி நடந்த தேர்தலுக்கும் இப்போது நடக்கும்இந்த வாக்குப் பதிவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்று நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications