பெண் உருவத்தில் முஷாரப்: ஜெ. குறித்து கருணாநிதி வர்ணனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திலே பெண் உருவத்திலே ஒரு முஷாரப் (ஜெயலலிதா) தோன்றி இப்படி தேர்தல் நடத்தஆரம்பித்துவிட்டால், இது எங்கே போய் முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

திமுக பிரமுகரின் வீட்டு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:

சைதாப்பேட்டையில் கடந்த காலங்களில் இந்த அரசால் 17,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதைவிசாரிக்க வந்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஆமாம் 5 மணிக்கு மேல் இந்த 17,000 போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளர் என்று கூறி அதைச் செய்த அதிகாரிகளுக்கு தண்டனை தரச் சொல்லிவிட்டுச் செனறார்கள்.

இந்த அரசும் போலி வாக்காளர்கள் சேர்க்க உதவிய அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து தண்டனைஅளித்தது. இப்போது தாசில்தார், கிராம அதிகாரிகளை வைத்து போலி சான்றிதழ் தந்து வாக்காளர்களைஉருவாக்கியிருக்கிறார்கள்.

அவரே தேர்தல் நடத்தி, அவரே ஓட்டும் போட்டுக் கொண்ட பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப் போலதமிழகத்திலும் நடக்க ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

ரத்தத்தில் ஊறி வளர்ந்த மக்களாட்சித் தத்துவம், ஜனநாயகத் தத்துவம் நமக்கு இருக்கின்ற காரணத்தால் அதற்கு ஒருஊறு வரும்போது வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.

ஆனால், இந்த அராஜகம் தொடர்ந்தால் நாடு காடாக மாறிவிடும். ஜனநாயகம் இல்லாமல் போய்விடும் என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+