மாணவர் கொலை வழக்கு: நக்கீரன் நிருபர் கோர்ட்டில் ஆஜர்
கோயம்புத்தூர்:
ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வீரப்பன் காட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம்கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த சில மாணவர்கள் கடந்த 1998ம் ஆண்டு வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் புகுந்தனர். வீரப்பனைப்பார்ப்பதற்காக அவர்கள் போனார்கள். பின்னர் அவர்களில் பக்தவச்சலம் என்ற மாணவனைத் தவிர மற்றவர்கள் திரும்பிவிட்டனர்.
ஆனால், பக்தவச்சலம் திரும்பவில்லை. அவரது இறந்த உடல் தான் காட்டுக்குள் கிடந்தது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் சிவசுப்ரமணியத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இந்த வழக்குதொடர்பாக கோவை மத்திய சிறையில் நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுஅடைக்கப்பட்டுள்ள சிவசுப்ரமணியம், கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது வெளியே கூடியிருந்த நிருபர்களைப் பார்த்து, தன் மீது போலீஸார் பொய்யான வழக்குகளைப் போட்டுள்ளதாகக்கூறினார்.












Click it and Unblock the Notifications