For Quick Alerts
For Daily Alerts
Just In
வாக்காளர்களை விட போலீசாரே அதிகம்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் இன்று நடக்கும் இடைத் தேர்தல் மறு வாக்குப் பதிவின் போது பல இடங்களில்வாக்காளர்களை விட போலீசாரே அதிகம் காணப்பட்டனர்.
பல வாக்குச் சாவடிகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் காணப்பட்டனர். சைதை மேற்குப் பகுதியில் உள்ளஅம்பாள் நகர் உள்ளிட்ட சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் தலைகளை விட போலீசாரே அதிகம்காணப்பட்டனர்.
வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இதுவரை எந்தவிதமான மோதல்களும் நடைபெறவில்லை என்றுபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டுள்ள 5 தேர்தல் பார்வையாளர்களும் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களைசுற்றிப் பார்த்த வண்ணம் உள்ளனர்.
Comments
Story first published: Thursday, June 6, 2002, 5:30 [IST]