சைதாப்பேட்டை: மறு வாக்குப் பதிவு தொடங்கியது
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள 58 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு மறு வாக்குப் பதிவுதொடங்கியது.
கடந்த 31ம் தேதி இடைத் தேர்தல் நடந்த சைதாப்பேட்டை தொகுதியில் ஆளும் அதிமுகவினர் கள்ள ஓட்டுபோட்டதாகவும் போலி ஜாதிச் சான்றிதழைக் காட்டி ஓட்டுக்களைப் போட்டதாகவும் தேர்தல் கமிஷனிடம் திமுகபுகார் கூறியிருந்தது. இத்தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறும் அக்கட்சி கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பூர்ஜியா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தத் தொகுதியில் விசாரணைநடத்தி தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் மூலம் அறிக்கை அனுப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 58 வாக்குச் சாவடிகளில் ஜூன் 6ம் தேதி (இன்று) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு இந்த 58 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம்60,000 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.












Click it and Unblock the Notifications