செல்வாக்கு இழந்த பொன்னையன்
சென்னை:
தமிழக நிதியமைச்சர் பொன்னையன் வைத்திருந்த கூடுதல் இலாகாவான தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டுஅமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றிய கையோடு சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியுள்ளார் ஜெயலலிதா. நிதியமைச்சர்பொன்னையன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ஜெயக்குமாரிடம்கொடுக்கப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர் பொன்னையனிடமிருந்த இலாகாவை ஜெயலலிதா பறித்துள்ள அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இடைத் தேர்தல் வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்ற கோபம் தவிர பொன்னையன் மீது மேலும் சிலவிஷயங்களில் ஜெயலலிதா காட்டமாகவே இருந்து வந்தார்.
ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன் புதிய தல்வர் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது பொன்னையன் பெயரும்அடிபட்டது. ஆனால் பொன்னையன் பெயர் தானாக எழவில்லை, அவரே கிளப்பி விட்டுள்ளதாக பின்னர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது.
அப்போது முதலே பொன்னையன் மீது லேசான அதிருப்தியில் இருந்து வந்தார் ஜெயலலிதா.
பின்னர் பன்னீர்செல்வம் முதலாவராக இருந்தபோது பொன்னையன் எல்லா விஷயங்களிலும் தலையிட்டார். இது சசிகலாவுக்கு எரிச்சலைத்தந்தது.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பொன்னையன் மற்றும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாபெரும் அதிருப்தியடைந்தார். தேர்தல் வேலைகளில் பன்னீர் செல்வம் மற்றும் தினகரனுடன் சேர்ந்து செயல்படுமாறு அனைத்துஅமைச்சர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பொன்னையன் பன்னீருடன் இணைந்து செயல்படாமல் தனித்தே செயல்பட்டார். இதனால் தான் அவருக்கு ஆப்புவைக்கப்பட்டுள்ளது. இபபோது பொன்னையன் வசம் இருப்பது நிதி மற்றும் சில சிறிய இலாகக்களே.
அதே நேரத்தில் பல்வேறு வழக்குகளில் இருந்து ஜெயலலிதா தப்புவற்கு பேருதவி புரிந்தார் எம்.ஜி.ஆர். காலத்தில்சட்ட அமைச்சராக பொன்னையன். அப்போது பொன்னையன் நியமித்த பல மாஜிஸ்திரேட்டுகள் தான் இப்போது நீதித்துயிைனஉயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பொன்னையனை ஒரேயடியாக தூக்கி எறியவில்லை ஜெயலலிதா.