பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்: வேகமும் கட்டணமும் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை- மதுரை இடையே இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசாக மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்போது வழக்கமாக சென்னையிலிருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்குமதுரையை அடைகிறது பாண்டியன் எக்ஸ்பிரஸ். சுமார் 450 கி.மீ. தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் எடுக்கிறது.

அடுத்த மாதம் முதல் இதன் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவு 8.50 மணிக்குப் புறப்பட்டு காலை5.30 மணிக்கே மதுரையை அடையச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ரயிலின் பயண நேரம் 9 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது. பயணிகளும் 1 மணி நேரத்தைமிச்சப்படுத்த முடியும்.

வேகத்தை மட்டுமல்லாமல் அதன் கட்டணத்தையும அதிகரிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்தமாதத்தில் இருந்து இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து ரூ. 20 அதிகரிக்கப்படும்.

இதே போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின்வேகத்தையும் அதிகரித்து கூடவே கட்டணத்தையும் அதிகரிக்கவும் தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+