பா.ம.க. உடைப்பு முயற்சி: சபாநாயகருக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயலவில்லை என்று கூறியுள்ள சபாநாயகர் காளிமுத்து அதைசெயலிலும் காட்ட வேண்டும் என அக் கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் முயற்சிகளில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அக்கட்சியில் உள்ள தலித் எம்.எல்.ஏக்களை பிரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுவரை சிவகாமி வின்சென்ட்,முருகவேல் ராஜன் ஆகியோர் பிரிக்கப்பட்டுவிட்டனர்.
இந்த வேலைகளை பா.ம.கவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய தலித் எழில்மலை செய்து வருகிறார்.
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயல்வதாக ஆளுநரிடம் அக் கட்சி புகார் மனுதந்தது.
நேற்று இந்தப் புகாரை சபாநாயகர் காளிமுத்து மறுத்தார். அதிமுக இந்தச் செயலில் ஈடுபடவில்லை என்றார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் இன்று ரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
பாட்டாள மக்கள் கட்சியை உடைக்க அதிமுக முயலவில்லை என்று சபாநாயகர் கூறுகிறார். இதை வாயளவில்வசனமாக சொல்வதால் பயனில்லை. அதை செயலிலும் காட்ட வேண்டும்.
சமீபத்தில் பா.ம.கவிலிருந்து விலகிய 2 எம்.எல்.ஏக்களின் நிலை என்ன? அவர்கள் சட்டசபிைல் தொடர்ந்து பா.ம.க.எம்.எல்.ஏக்காளாக செயல்படுவார்களா? தனித்து விடப்படுவார்களா? இந்த விஷயத்தில் சபாநாயகர் என்ன முடிவுஎடுத்துள்ளார்? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications