தமிழகத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்: மேலும் 1 மணி நேரம் இயங்கும்
சென்னை:தமிழகம் முழுவதிலும் பள்ளி வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் வேலை நேரமும் ஒரு மணி நேரம்அதிகரிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பரமசிவன் அறிக்கையொன்றில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக பள்ளி நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி நகர்ப்புறங்களில் காலை 8.30 மணிக்கு பள்ளிகள் தொடங்கிமாலை 4.30 மணிக்கு முடிவடையும்.
ஊரகப் பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடையும்.
தற்போது உள்ள நேரத்தை விட கூடுதலாக 1 மணி நேரம் பள்ளிகள் செயல்படும். இப்போது 7 மணி நேரம் நடக்கும் பள்ளிகள் இனி 8 மணிநேரம் இயங்கும்.
ஆசிரியர்களை அதிக நேரம் பணி செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகத்தெரிகிறது.
இத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications