கல்யாண வீட்டில் மொய் பணம் அபேஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு திருமண வீட்டில் மொய் பணம் அபேஸ் செய்யப்பட்டது.
திமுக பிரமுகர் கோபால் என்பவரின் மகள் திருமணம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். புதன்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு மொய் கொடுத்து சென்றனர்.அந்தப் பணம் அனைத்தும் ஒரு பையில்போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஒருவர் அந்தப் பையை எடுத்துச் சென்றார். அவர் மணமக்களின் உறவுக்காரராகஇருக்கும் என நினைத்து யாரும் அவரைத் தடுக்கவில்லை.
ஆனால் சில நிமிடங்களில் மொய்ப் பையைக் காணவில்லை என்று மண வீட்டார் கூறியபோதுதான் அது திருடப்பட்டு விட்டது தெரியவந்தது.
அதில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications