நக்கீரன் நிருபரை சித்திரவதை செய்யும் தமிழக போலீஸ்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவ சுப்பிரமணியத்தை போலீசார் சித்திரவதை செய்து வருவதைத் தடுக்கவும் அவர் மீதான போலிவழக்குகளை வாபஸ் பெறச் செய்யவும் தமிழக பத்திரிக்கை நிருபர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர்களான என்.ராம், பாலசுப்பிரமணியம், வாஸந்தி, சிகாமணி, சம்பத் ராஜ்ஆகியோர் நேற்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.
இத் தகவலை பிரண்ட் லைன் பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் இன்று தெரிவித்தார். அவர் கூறுகையில், சிவசுப்பிரமணியத்துக்கும் வீரப்பன் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக தமிழக போலீசார் கூறி வருவது குறுத்து உண்மைஅறியும் குழு விசாரணை நடத்தியது. இதில் போலீசாரின் வழக்கு பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் மீது அடுத்தடுத்து ஏதாவது ஒரு வழக்கை போலீசார் ஜோடித்து வருகின்றனர். இது பத்திரிக்கைசுதந்திரத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது.
இது தவிர போலீஸ் காவலில் சிவசுப்பிரமணியம் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார். இது மிக அராகஜமானது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவும் தான் நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் நிருபர் சிவசுப்பிரமணியத்தையும் காட்டுக்குச் செல்லவலியுறுத்தினர்.
அவர் முதலில் போக மறுத்துவிட்டார். அவரை கெஞ்சி, கூத்தாடி அனுப்பினர். ஆனால், இப்போது அதிமுகஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி செய்தார் என்பதற்காக அதை எதிர்த்தும், அரசுக்கு உதவிய கோபலையும்சிவசுப்பிரமணியத்தையும் கொடுமைப்படுத்தி வருவது கொடுமையான விஷயம்.
இதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு நேற்று தமிழக பத்திரிக்கையாளர்கள் குழு கர்நாடக முதல்வரை சந்தித்துவலியுறுத்தியது. பத்திரிக்கையாளர்களே நடத்திய விசாரணையில் அவர்கள் மீது தமிழக போலீசார் கூறும் புகார்கள்தவறு என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையும் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பத்திரிக்கையாளர்களின் செயலைப்பாராட்டினார். சிவ சுப்பிரமணியமும் கோபாலும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உதவுவதாகவும் கிருஷ்ணா உறுதியளித்தார். இதே போல தமிழகமுதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து இது குறித்து பேசப்படும் என்றார் என்.ராம்.