செஞ்சி அருகே வேன்-பஸ் மோதல்: 11 காங்கிரஸ் தொண்டர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

செஞ்சி:

செஞ்சி அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட11 காங்கிரஸ் தொண்டர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சென்னையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செங்கம்மற்றும் திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பல வேன்களில் சென்னை வந்துகொண்டிருந்தனர்.

இன்று காலை செஞ்சி அருகே பாலப்பாடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார்பஸ்சுடன் இந்த வேன் பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த பஞ்சாயத்து யூனியன் தலைவர் உள்பட 9 காங்கிரஸ் தொண்டர்கள் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பெரும் விபத்தையடுத்து சென்னையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாநாடுஒத்திவைக்கப்பட்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+