திருவண்ணாமலை கும்பாபிஷேக விழா: இன்று தொடக்கம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வரும் 27ம் தேதிகும்பாபிஷேகம் நடக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க அருணாச்சலேஸ்வரர் உடனுறை உண்ணாலையம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகுவரும் 27 தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்கான திருப்பணிகள் பல கோடி செலவில் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிந்து இன்று முதல் கும்பாபிஷேக விழாதொடங்குகிறது.
இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதன் பிறகு தினசரி பூஜைகள் நடைபெறவுள்ளன. 22ம் தேதி யாகசாலை பூஜை நடக்கிறது.
27ம் தேதி காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 4மணிக்கு மகா அபிஷேகம், 8.30 மணிக்கு திருக்கல்யாணம், 10 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.
இதையொட்டி வரும் 27ம் தேதி திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அடுத்த மாதம் 6ம் தேதிஅரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் தமிழக தல்வர் ஜெயலலிதாகலந்து கொள்கிறார்.
கும்பாபிஷேகத்தையடுத்து திருவண்ணாமலை முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications