இந்திய விமானப் படை தலைவர் அமெரிக்கா பயணம்
டெல்லி:
இந்திய விமானப் படை தலைவர் ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி 10 நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.
அங்கு பாதுகாப்புத் தளவாடங்கள், ராணுவ முகாம்கள், விமானப் படை மையங்கள், பென்டகன் ஆகியஇடங்களை அவர் பார்வையிடுகிறார்.
மூத்த பாதுகாப்புத்துறை மற்றும் விமானப் படை அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்துகிறார்.
இந்திய- அமெரிக்க ராணுவரீதியிலான ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பயணம் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் தான் ஆக்ராவில் அமெரிக்க விமானப் படையினர்இந்திய விமானப் படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
விமானப் படைக்கான அணு ஆயுத கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அவர் பென்டகன் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அலாஸ்காவில் அமெரிக்க விமானப் படையினருடன் இணைந்து இந்திய விமானப் படையினர்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இது குறித்தும் கிருஷ்ணசாமி ஆலோசிப்பார்.
எதிர்காலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக இரு நாட்டு விமானப் படைகளும் இணைந்து செயல்படுவது குறித்தும்,தேவைப்பட்டால் இந்திய போர் விமானங்கள், விமானத் தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்துவதுகுறித்தும் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்துவார்.












Click it and Unblock the Notifications