For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர்கள் பதவி பகாசுரர்கள்: ஜெ. கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

சிலர் (கருணாநிதி) பதவிக்காக பரிதவித்துக் கொண்டுள்ளனர். நனவிலும் பதவி, கனவிலும் பதவி என்று பதவிப்பித்தர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாருமான ஜெயலலிதா கூறினார்.

திருப்பூரில் மக்கள் நலத் திட்டங்களைத் துவக்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது:

அவர்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை உண்டா? உண்டு, தங்கள் மக்களின் (முரசொலி மாறன், ஸ்டாலின்)சிந்தனை தான் உண்டு.

அவர்களுக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை உள்ளதா? உள்ளது, தங்கள் மக்கள் பிரச்சனையில் தான் அக்கறைஉள்ளது.

பிறர்க்கு உதவுவது அவர்கள் லட்சியம் அல்ல, தங்களுக்கு பதவி பெறுவது தான் லட்சியம். அதுவும் ஒரு பதவிபோதாதாம். பஞ்சாயத்துத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதி பதவி வரை எல்லா பதவிகளையும் தந்தாலும்அவர்களுக்குப் போதாது.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்தனர். ஆனால், அதிலிருந்து அவர்கள் பாடம்கற்கவில்லை. அப்படிக் கற்றுக் கொள்ளும் வழக்கம் இல்லை என்பது தான் அவர்களது கடந்த கால சரித்திரம்.

இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரத்தின் விளிம்புக்கே போய்விட்டார்கள்.அவர்களின் ஆத்திரத்தில் இருந்து தேர்தல் கமிஷன் கூட தப்பவில்லை.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. இவர்களிடம் உள்ளதெல்லாம் எதையுமே தாங்காதஇதயம் தான். இதற்குக் காரணம் அளவுக்கு மிஞ்சிய பதவி ஆசை.

பதவி என்று ஒன்று இருந்தால் அது தனக்கு வேண்டும் இல்லாவிட்டால் தனது குடும்பத்தினருக்கு வேண்டும். இதுதான் இந்த பதவி பகாசுரர்களின் அரசியல் சித்தாந்தம்.

இவர்களது ஓயாத புலம்பல்களுக்கு மத்தியில் தான் இந்த அரசு சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X