சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் பல இடங்களில் மயக்கம்
தேவகோட்டை:
பள்ளிகளில் அரசு சத்து மாத்திரை சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் தினமும் சத்து மாத்திரை வழங்கப்பட்டுவருகிறது.
தேவகோட்டையில் உள்ள பெத்தலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவிகளுக்கு நேற்று(வியாழக்கிழமை) சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஆனால் மாத்திரைகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி எடுத்தனர்.அவர்களுக்குத் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு பின்னர் மயக்கமும் ஏற்பட்டது.
மயக்கமடைந்த மாணவிகள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூரிலும்...
இதற்கிடையே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளிலும் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்ட 220மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் உள்ள ரொக்க குத்தகை மற்றும் சத்திரம் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவிகளும்,புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும், ஆரியலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 37 மாணவிகள் உள்பட ஏராளமான மாணவிகள் சத்து மாத்திரையைச்சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தனர்.
அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.