"கராத்தே"வுக்கு எதிராக குரங்குக்கு மாலை அணிவித்து திமுகவினர் போராட்டம்
சென்னை:
சென்னையின் மேயராக "கராத்தே" தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டதைக் கண்டிக்கும் வகையிலும்கிண்டலடிக்கும் வகையிலும் குரங்குக்கு மாலை அணிவித்து சென்னையில் இன்று திமுகவினர் போராட்டம்நடத்தினர்.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவியை தமிழக அரசு பறித்ததைக் கண்டித்து தொடர்ந்து 4வது நாளாகதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் இன்று காலை திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் அரசுக்குஎதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திமுக எம்.பி. குப்புசாமி, முன்னாள் அமைச்சர் சுந்தரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய திமுகவினர் ஒரு குரங்கின் கழுத்தில் மாலையைப்போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
அந்தக் குரங்கின் தலைப்பகுதியில் "மேயர்" என்று எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய அட்டையையும் திமுகவினர் மாட்டிவிட்டிருந்தனர்.
குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல் தற்போது "கராத்தே" தியாகராஜனுக்கு மேயர் பதவிஅளிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் திமுகவினர் கோஷங்களும் எழுப்பினர்.