புலிகள்- அரசு பேச்சுவார்த்தையே நடக்காமல் போகலாம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நடக்காமல் போகலாம் என்று இலங்கைமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறினார்.

முன்பு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசின் சார்பில் பங்கேற்றவர் கதிர்காமர். அதிபர் சந்திரிகாவின் மக்கள்கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவரான அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிலவரம் இப்போது அபாயகட்டத்தில் உள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் பேச்சு நடத்தவாய்ப்பிருப்பதாக மக்கள் நினைக்கவிலலை.

என்ன பேசப் போகிறார்கள், எப்போது பேசப் போகிறார்கள் என்றே அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை.இப்படியே இழுத்தடித்து பேச்சுவார்த்தையே நடக்காமல் போனாலும் ஆச்சரியமில்லை.

இப்போதைக்கு போர் நடக்கவில்லை. ஆனால், இந்த இரு தரப்பினரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்என்று தெரியவில்லை.

மீண்டும் இரு தரப்பினரும் போரில் ஈடுபடுவார்களோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக புலிகள் மீதான தடையை அரசு நீக்கினால் கூட பரவாயில்லை. (இதுசந்திரிகா கட்சியிடம் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகும். முதலில் தடையை நீக்கக் கூடாது என்று கூறி வந்தார்சந்திரிகா.)

தமிழர் பகுதியில் இடைக்கால அரசு அமைப்பது மட்டுமின்று, அடிப்படையான அரசியல் விவகாரங்களையும்விவாதிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+