பண மோசடியில் ராஜ்கிரணுக்கு தொடர்பில்லை: பத்மஜோதி
சென்னை:
புதுவையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம் மோசடி செய்த சம்பவத்தில் நடிகர்ராஜ்கிரணுக்குத் தொடர்பில்லை என்று அவரது ரகசிய மனைவியான பத்மஜோதி போலீஸாரிடம் வாக்குமூலம்அளித்துள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் ஒருவருக்கு பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் வாங்கித் தருவதாககூறி ராஜ்கிரண் முன்னிலையில் பத்மஜோதியிடம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு பண மோசடி தொடர்பாக சென்னையில் பத்மஜோதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாண்டிச்சேரி மோசடி தொடர்பாக பத்மஜோதியிடம் அம்மாநில போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது இந்த விவகாரத்தில் ராஜ்கிரணுக்கு சம்பந்தம் இல்லை என்று பத்மஜோதி வாக்குமூலம் அளித்தார்.மேலும் ராஜ்கிரண் தனது கணவர்தான் என்றும் அவர் கூறினார்.
பாண்டிச்சேரி போலீஸாரின் விசாரணை முடிந்த பின்னர் நாமக்கல் நீதிமன்றத்தில் பத்மஜோதிஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து பத்மஜோதி பலத்தபாதுகாப்புடன் சேலம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.