நீதிமன்றத்துக்கு வி.எச்.பி. கட்டுப்பட வேண்டும்: பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தி விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமோ, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமோ தான தீர்க்க முடியும் என பா.ஜ.க.கூறியுள்ளது.
அயோத்தி விவகாரம் குறித்துப் பேச டெல்லி வந்திருக்கும் காஞ்சி சங்கராச்சாரியாரை மத்திய அமைச்சரும் பா.ஜ.க.தேசிய பொதுச் செயலாலருமான வெங்கைய்யா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின் வெளியே வந்த அவரிடம், இந்தப் பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்றுவிஸ்வ ஹிந்து பரிஷத் கூறியிருக்கிறதே என்று கேட்டபோது,
எந்த அமைப்பாக இருந்தாலும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இதில் தீர்ப்பு கிடைக்க தாமதமாகிவருவதால் வி.எச்.பி. இவ்வாறு பேசியிருக்கிறது. இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை அல்லதுநீதிமன்றத் தீர்ப்பு என்பது தான் பா.ஜ.கவின் கருத்து.
இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications