மதுரையில் காங்கிரஸ்- தமாகா இணைப்பு விழா: வாசன் அறிவிப்பு
சென்னை:
காங்கிரஸ்- தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு விழா மதுரையில் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி இந்த விழாநடக்கவுள்ளது.
இது குறித்து தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது பலரும் மதுரை அல்லது திருச்சியில் விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மதுரையில் இந்த விழாவை நடத்த வாசன் முடிவு செய்துள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,மதுரையில் மிக பிரம்மாண்டமான வகையில் இந்த விழா நடக்கும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திமுன்னிலையில் இந்த இணைப்பு விழா மாநாடு நடக்கும் என்றார்.
எம்.எல்.ஏ. எதிர்ப்பு:
இந் நிலையில் இரு கட்சிகளின் இணைப்புக்கு கிள்ளியூர் தொகுதி த.மா.கா. எம்.எல்.ஏவான குமாரதாஸ் எதிர்த்துத்தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுக்குழு, நிர்வாகக் குழுவை கூட்டாமல் தன்னைச் சுற்றியுள்ள சில தலைவர்களுடன் பேசிவிட்டுகட்சியை இணைப்பதாக வாசன் அறிவித்துள்ளார். இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே, நான்தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிலேயே இருக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.