காவிரி பிரச்சனை: இன்று அவசரமாகக் கூடுகிறது தமிழக அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இன்று கூடவுள்ள தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறந்து விடப்பட்டிருக்க வேண்டிய மேட்டூ"ர் அணை, இந்த ஆண்டு நீரில்லாததால்இன்னும் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேண்டியகாவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை உடனடியாகக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்றுதமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் கர்நாடக அரசை வலியுறுத்தின.

ஆனால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீர் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்று தமிழக அரசுக்குகர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடிதம் அனுப்பினார். மேலும் நீர் தரப் போவதில்லை என்றும் கர்நாடக அரசுகூறிவிட்டது.

தமிழக அரசோ கர்நாடக அரசைக் கண்டிக்காத காவிரி நதி நீர் ஆணையத்தைப் புறக்கணிக்கப் போவதாகஅறிவித்து விட்டது. மேலும் இப்பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தமிழகஅரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை தஞ்சாவூர் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி டெல்டாவிவசாயிகளுக்கு அங்கேயே வேறு வேலை வாய்ப்பு தருவதற்காக ரூ. 164 கோடியில் திட்டங்களை அறிவித்தார்.

இந்நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிப்பதற்காகதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.

கடந்த 21ம் தேதி தமிழக அமைச்சரவை கூடிய நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+