சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு
சென்னை:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணை தமிழக அரசுகுறைத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இது போன்ற சுயநிதி பொறியியல்கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் நிரப்பப் படாமலேயே இருந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்றுஅறிவித்துள்ளது.
இதன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட பாடங்களில்தேர்ச்சி பெற்றிருந்தாலே சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விட முடியும்.
அது போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 55 சதவீத மதிப்பெண்களும், பிற வகுப்பினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் தகுதிமதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications