ஸ்டேசன் மாஸ்டர்கள் ஸ்டிரைக்: ரயில் போக்குவரத்து பாதிக்கும்
சென்னை:
அடுத்த மாதம் 18ம் தேதி முதல் இரு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஸ்டேசன் மாஸ்டர்கள்திட்டமிட்டுள்ளனர். இதனால் ரயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, சீருடை அலவன்ஸ் உள்பட 11 கோரிக்கைகளை முன் வைத்து 18 மறறும் 19ம் தேதிகளில் இந்தப்போராட்டத்தை நடத்த ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள இந்த போராட்டத்தால் நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் நடு வழியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும்.
ரயில்கள் ஒரு ஸ்டேசனில் நிற்க வேண்டுமா இல்லையா என்பதை ஸ்டேசன் மாஸ்டர்கள் தான் பச்சை அல்லதுசிவப்பு கொடியசைத்து டிரைவர்களக்குத் தகவல் தருவர்.
ஸ்டேசன் மாஸ்டர் கொடியசைக்கத் தவறினால் அந்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றுவிட வேண்டும். ஸ்டேசன்மாஸ்டருக்கு உரிய அதிகாரமுள்ள அதிகாரி தான் ரயிலின் பயணத்தை தொடர ஆணையிட முடியும்.
இதனால், இவர்களின் போராட்டத்தால் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிற்க வேண்டிய நிலைஏற்படும். அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக ஆணை வாங்கிக் கொண்டு தான் தொடர்ந்து செல்ல முடியும். இந்தஆணை வாங்க குட்டி ரயில் நிலையங்கள் உள்பட எல்லா இடங்களிலும் ரயில்கள் நிற்க வேண்டி வரும்.
இதனால் இந்த ரயில்கள் ஊர் போய்ச் சேர பல மணி நேரம் தாமதமாகும். நீண்ட தூர ரயில்கள் ஒரு நாள் கூடதாமதமாகலாம். இதனால் ஏற்படும் குளறுபடியால் எல்லா ரயில்களின் நேரமும் மாறிவிடும் நிலையும் உருவாகும்.