மனைவியுடன் சண்டையால் மகளைக் கொன்று புதைத்த தந்தை
சேலம்:
சேலம் அருகே மனைவி அருகே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 வயது பெண் குழந்தையை கழுத்தைநெறித்துக் கொன்றார் தந்தை.
சேலம் மாவட்டம் கருவாலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கும் இவரது மனைவி வசந்தி.இவர்களுக்கு 2 வயது பெண் குழந்தை இருந்தது.
சமீபத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை எழுந்தது. இதையடுத்து வசந்தி கோபித்துக் கொண்டு தனதுதாயாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
சில வாரங்கள் கழித்து திரும்பி வந்தார். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது வீட்டில்பாலகிருஷ்ணன் தான் வீட்டில் இருந்ததாகவும் குழந்தையை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறினர்.
மேலும் பாலகிருஷ்ணனும் சில நாட்களாக வீட்டில் இல்லை என்றும் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த வசந்தி குழந்தையைக் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் தந்தார். போலீசார்பாலகிருஷ்ணனின் கதவுப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது வீட்டில் பெரிய குழிதோண்டப்பட்டிருந்தது.
ஒரு குழந்தையை புதைக்கும் அளவுக்கு அந்தக் குழி இருந்தது. இதனால், குழந்தையை அவர் கொன்றிருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், குழிக்குள் குழந்தையின் உடல் இல்லை.
பின்னர் சுடுகாட்டில் விசாரித்தபோது பாலகிருஷ்ணன் ஒரு குழந்தையை அங்கே கொண்டு போய் புதைத்ததுதெரியவந்தது.
இதையடுத்து அந்தக் குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அது தன்னுடைய குழந்தை தான் என்றுவசந்தி அழுது துடித்தவண்ணம் அடையாளம் காட்டினார்.
அந்தக் குழந்தை கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகளைக் கொன்ற பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications