சுடுகாட்டில் சவப்பெட்டியில் புதைந்திருந்த கள்ளச் சாராயம்
சிதம்பரம்:
போலீசாரிடம் சிக்கிவிடாமல் இருக்க கள்ளச்சாரயத்தை சவப்பெட்டிகளில் வைத்து சுடுகாட்டில் புதைத்து மறைத்துவந்த கும்பல் பிடிபட்டது.
வழக்கமாக சாராயத்தை ஊரல்களில் தான் வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த ஊரல்களை மண்ணில்புதைத்து மறைப்பதும் வழக்கம்.
ஆனால், இப்படிச் செய்யும்போது ஊரல்களை போலீசார் எளிதில் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்பதால் ஒரு புதியடெக்னிக்கை சிதம்பரம் பகுதி கள்ளச் சாராய ஆசாமிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி சாராயத்தை பாட்டில்களில் வைத்து சவப்பெட்டிகளில் அடுக்கி அதை சுடுகாட்டில் புதைத்து வைத்துவந்துள்ளனர்.
கள்ளச்சாராய நடமாட்டம் இருந்தும் அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் குழம்பித் தவித்த போலீசார்ரகசியமாய் விசாரணை நடத்தியதில் இந்த விவரம் தெரியவந்தது.
இதைப் பதுக்கி வைத்திருந்த கும்பலின் தலைவன் கலியன் என்பவன் தப்பியோடிவிட்டான்.
சுடுகாட்டு காவலாளிக்கு அவ்வப்போது ஒரு பாட்டிலை தந்துவிட்டதால் அவர் இதற்கு உடந்தையாகஇருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications