சந்தன கட்டை கடத்தல் லாரி சுட்டு கவிழ்ப்பு: ஒருவன் பலி
உடுமலைப்பேட்டை:
கேரளாவில் இருந்து சந்தனக் கட்டைகள் கடத்தி வந்த லாரியை வனத்துறையினர் ஜீப்பில் விரட்டிச் சென்றுதுப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர்தப்பியோடிவிட்டனர்.
ஒரு லாரியில் சந்தனக் கட்டைகள் கடத்தி வரப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கேரள- தமிழக எல்லையில் வாகன சோதனையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது ஒருலாரி நிற்காமல் போனது. இதையடுத்து அந்த லாரியை வனத்துறையினர் ஜீப்பில் விரட்டிச் சென்றனர்.
அப்போது வனத்துறையினர் மீது சந்தனக் கட்டைகளை அந்தக் கும்பல் வீசியது. கடும் வேகத்தில் அவர்கள்லாரியை ஓட்டிச் சென்றனர். வனத்துறையினரும் விடாமல் துரத்திச் சென்றனர். சுமார் 20 கிலோ மீட்டர் தூரமவிரட்டியும் லாரி நிற்காமல் சென்றது.
இதையடுத்து உடுமலைப்பேட்டை நகர எல்லை அருகே காட்டுப் பகுதியில் வனத்துறையினர் ஓடிக் கொண்டிருந்தஅந்த லாரியை சுட்டனர். இதில் இரு டயர்களும் வெடித்தன. இதையடுத்து அந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் அந்த லாரியில் இருந்த ஒருவர் லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்தான். மற்ற நால்வரும்தப்பியோடிவிட்டனர்.
சினிமா மாதிரி நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரியில் ஒன்றறை டன் எடை கொண்ட சந்தனக் கட்டைகள் இருந்தன.
குண்டு காயங்களுடன் ஒருவர் அனுமதி:
இந் நிலையில் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் ஒருவர் இன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
இவருக்கு 3 நாட்களுக்கு முன் துப்பாக்கிக் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இவரது பெயர் மகாலிங்கம் என்றும்,காட்டுப் பகுதியில் தமிழக-கேரள எல்லையில் இருக்குக் குண்டுக்காயம் ஏற்பட்டதாகதவும் போலீசார்தெரிவித்தனர்.
இவர் சந்தனக் கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 18 பேர் கொண்ட தனதுகும்பலுடன் காட்டுப் பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தன்னை யாரோ சிலர் சுட்டதாக இவர்கூறியுள்ளார்.
இவர் தானாகவே வந்து உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனை டாக்டர்கள் இவர்குறித்து போலீசாருக்குத் தந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோயம்புத்தூர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. இவனை வீரப்பன் கும்பல் தாக்கியிருக்கலாம் என்றுதெரிகிறது.