இந்திய கடற்படையை கண்காணிக்க சீன உதவி பெறும் பாக்.
மாஸ்கோ:
மக்ரானா என்ற இடத்தில் உள்ள தனது கடற்படைத் தளத்தை சீனாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது என்றுரஷ்ய ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
இதன்மூலம் இந்தியக் கடற்படையின் செயல்பாடுகளையும், வளைகுடாவில் உள்ள அமெரிக்கக் கடற்படையின்செயல்பாடுகளையும் ரகசியமாகக் கண்காணிக்க சீனாவால் முடியும்.
அரபிக் கடலில் இந்த கடற்படை முகாம் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங் சென்ற பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் சீனாவுக்கு இந்த உதவியைச் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து மக்ரானா கடற்கரையில் சீனா தனது எலெக்ட்ரானிக் கண்காணிப்பு மையங்களை அமைக்கும்பணியை துவக்கியுள்ளது. இங்கு சீன கடற்படைக் கப்பல்களும் முகாமிடவுள்ளன.
சீன கடற்படைக் கப்பல்கள் தனது பகுதியில் இருந்தால் தங்களை இந்தியக் கடற்படை அவ்வளவு எளிதில் தாக்காதுஎன பாகிஸ்தான் கருதுவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.