சென்னையில் 1,500 போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் போலி குளூக்கோஸ் தயாரித்து விற்பனை செய்து வந்த வட இந்திய வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
வடசென்னையின் சில பகுதிகளில் உள்ள கடைகளில் போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள் விற்கப்பட்டதுபோலீசாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஏழுகிணறு பகுதியில் வட இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் பாண்டியா என்பவர் போலி குளூக்கோஸ்தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய வீட்டில் போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ரோஹித்தின் வீட்டிலிருந்து சுமார் 1,500 போலி குளூக்கோஸ் பாக்கெட்டுகள்கைப்பற்றப்பட்டன. மேலும் போலி குளூக்கோஸ் தயாரிப்புக்குத் தேவையான சர்க்கரை மூட்டைகளும் பறிமுதல்செய்யப்பட்டன.
பின்னர் ரோஹித்தையும் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications